இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸிலிருந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

by Staff Writer 29-08-2021 | 9:58 PM
Colombo (News 1st) இஸ்ரேல், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக 'த சண்டே டைம்ஸ்' பத்திரிகை இன்று (29) செய்தி வௌியிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் பிரான்ஸிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், நோயாளர்கள் அதிகமாக பதிவாகும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். இஸ்ரேலில் நாளாந்தம் சுமார் 7,500 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.