by Staff Writer 29-08-2021 | 11:59 AM
Colombo (News 1st) தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் எதிர்வரும் நாட்களில் 'மறுவாழ்வு முகாம்கள்' என அழைக்கப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு தாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் அவர்கள் அகதிகள் இல்லை என்பதுடன் அவர்களுக்காக தாம் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.