Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில்
(Drone) காபூல் குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதை நம்புவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கஹர் (Nangarhar) மாகாணத்தை இலக்குவைத்து அமெரிக்காவினால் வான் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் காபூலில் குண்டுத் தாக்குதலை நடத்திய ஐஎஸ் குழுவின் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதை நம்புவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்திற்கு வௌியே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அமெரிக்க படையை சேர்ந்த 13 வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
கடந்த இரு வாரங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வௌியேறியுள்ளதாக நம்பப்படுகின்றது.
காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படை வீரர்கள்