தனிமைப்படுத்தலை மீறிய மேலும் 667 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 667 பேர் கைது

by Staff Writer 28-08-2021 | 2:12 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 667 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 63 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைத்தவிர, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் 13 இடங்களிலும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 60,228 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்