கடவத்தை வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி தம்பதியினர் உயிரிழப்பு

by Staff Writer 28-08-2021 | 2:27 PM
Colombo (News 1st) கடவத்தை - எல்தெனிய பகுதியிலுள்ள இரு மாடி வீடொன்றில் இன்று (28) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.20 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 57 மற்றும் 53 வயதான இருவரே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். கடவத்தை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.