English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Aug, 2021 | 8:30 pm
Colombo (News 1st) நேற்று (26) உறுதி செய்யப்பட்ட கொரோனா மரணங்களுடன் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000-ஐ கடந்துள்ளது.
நாட்டில் ஒரே நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய கொரோனா உயிரிழப்புகளாக 209 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை COVID-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட 209 கொரோனா மரணங்களில் 163 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.
இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகூடிய எண்ணிக்கையிலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று வரை 93,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர், தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 1,633 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
20 May, 2022 | 04:46 PM
09 Apr, 2022 | 09:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS