75% சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

75% சிறைக் கைதிகளுக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

by Staff Writer 27-08-2021 | 12:26 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 75 வீதமானோருக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமார் 20,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 15,000 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார். அதற்கமைய, இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத ஏனைய கைதிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார். இதனிடையே, அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க சுட்டிக்காட்டினார்.