மன்னாரில் 9100 கிலோகிராம் உலர்ந்த கடலட்டை பறிமுதல்

மன்னாரில் 9,100 கிலோகிராம் உலர்ந்த கடலட்டை பறிமுதல்

by Bella Dalima 27-08-2021 | 10:25 PM
Colombo (News 1st) மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறும் வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 9,100 கிலோகிராம் உலர்ந்த கடலட்டையை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எருக்கலம்பிட்டி பகுதியில் கடற்படையினர் நேற்று முன்னெடுத்த விசேட தேடுதலின் போது அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறும் வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 9,100 கிலோகிராம் உலர்ந்த கடலட்டை கைப்பற்றப்பட்டது. இதன்போது, கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கடலட்டையுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.