சிறப்பு முகாமில் உள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் காத்திருப்பு போராட்டம்

by Staff Writer 27-08-2021 | 10:32 PM
Colombo (News 1st) தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாமிற்குள் பதாதைகளை ஏந்தியவாறு இலங்கை அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு பேரணி நடத்தியுள்ளனர். இதேவேளை, திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது இலங்கை தமிழர்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் தற்போது மௌனம் காப்பது ஏன் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.