COVID மரணங்களின் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரிப்பு

COVID மரணங்களின் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரிப்பு

by Staff Writer 26-08-2021 | 10:34 AM
Colombo (News 1st) நேற்றிரவு 198 COVID மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 4,483 பேர் நேற்று கண்டறியப்பட்டனர். அதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,07,768 ஆக அதிகரித்துள்ளது. 3,48,930 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் 50,890 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.