தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சபாநாயகர் ஒப்பம்

2019 கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

by Staff Writer 26-08-2021 | 4:26 PM
Colombo (News 1st) '2019 கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள்' சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். இந்த சட்டமூலம் கடந்த 17 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. COVID நிலைமையைக் கட்டுப்படுத்தல், தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க ''2019 கொரோனா வைரஸ் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம்'' ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.