28,29ஆம் திகதி பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

மொத்த விற்பனைக்காக 28, 29 ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

by Staff Writer 26-08-2021 | 11:08 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு - புறக்கோட்டை மெனிங் சந்தை குறித்த தினங்களில் திறக்கப்படவுள்ளன. இதேவேளை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர்களுடன் தொடர்புகொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென சஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.