காபூல் விமான நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்

காபூல் விமான நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்

by Bella Dalima 26-08-2021 | 2:57 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. காபூல் விமான நிலையத்திற்கு பாரிய தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் காபூல் விமான நிலைய பகுதியை விட்டு விலகிச்செல்லுமாறு சில நாடுகள் அங்குள்ள தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. கடந்த 10 நாட்களில் சுமார் 82,000 பேர் காபூலிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளர். எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளை காபூலிலிருந்து வௌியேற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், காபூல் விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காபூலை விட்டு வௌியேறி பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.