by Staff Writer 26-08-2021 | 5:43 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.