காணி பிரச்சினை கொலையில் முடிந்தது; சித்தங்கேணியில் சம்பவம்

by Bella Dalima 25-08-2021 | 5:10 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவின் சித்தங்கேணி, கலைவாணி வீதியில் 49 வயதான ஆண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியது. கைகலப்பில் காயமடைந்த தந்தையும் மகளும் அயலவர்களின் உதவியுடன் முச்சக்கர வண்டியில் சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே தந்தை உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். தலையில் பலத்த காயமடைந்த, உயிரிழந்தவரின் 20 வயதான மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.