உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிப்பு

194 கொரோனா மரணங்கள்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிப்பு

by Staff Writer 24-08-2021 | 10:19 AM
Colombo (News 1st) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 194 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 4,353 பேருக்கு நேற்று (23) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 3,94,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,44,381 பேர் குணமடைந்துள்ளனர். 7,366 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்