10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

by Staff Writer 24-08-2021 | 10:47 AM
Colombo (News 1st) இதுவரையில் இரண்டு கோடிக்கும் அதிக கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. இன்று (24) அதிகாலை 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன. முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக இன்று கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோரில் குறிப்பிடத்தக்களவானோருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்தார். ஆடை கைத்தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கே இந்த அவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தற்போது முதலாவது தடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றியதன் பின்னர், 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறினார்.