வாராந்தம் 300,000 லிட்டர் திரவ மருத்துவ ஒக்சிஜன் இறக்குமதி செய்யப்படவுள்ளது

by Staff Writer 24-08-2021 | 11:40 AM
Colombo (News 1st) வாராந்தம் 300,000 லிட்டர் திரவ மருத்துவ ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திரவ மருத்துவ ஒக்சிஜனை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம், சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. கொரோனா நோயாளர்களுக்கான ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 120,000 லிட்டர் திரவ மருத்துவ ஒக்சிஜனை இறக்குமதி செய்ய கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும், தற்போது திரிபடைந்த வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதால், இறக்குமதி செய்யப்படும் ஒக்சிஜனின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.