வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

by Bella Dalima 24-08-2021 | 2:44 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லையென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாரத்ன தெரிவித்தார். இன்று நண்பகல் 12.30 அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் இன்று (24) நண்பகல் பதிவாகிய நிலநடுக்கம் தொடர்பில், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் வினவியபோது, நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அதன் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.