by Bella Dalima 24-08-2021 | 10:40 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்கள் தொடர்பான மேற்பார்வைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இந்த வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பகிரப்படுவதால், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களை மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக நியமித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
வைத்தியசாலை பொலிஸ் காவலரண்களின் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்து செல்வதற்காக இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.