புதிய மதுரை ஆதீனம் பொறுப்பேற்பு

மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு

by Staff Writer 23-08-2021 | 5:24 PM
Colombo (News 1st) திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மை மிகு மதுரை ஆதீனத்தின் 293 ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து ஆசி வழங்கினர். மதுரை ஆதீனத்தின் 292 ஆவது ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13 ஆம் திகதி சிவப்பிராப்தம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 293 ஆவது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இன்று முடிசூட்டும் நிகழ்வு தருமபுர ஆதீனத்தின் 27 ஆவது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.