ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் அதிக கொரோனா நோயாளர்கள் பதிவு

by Staff Writer 23-08-2021 | 10:13 AM
Colombo (News 1st) ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் அதிக கொரோனா நோயாளர்கள் நேற்று (22) பதிவாகினர். 4,282 பேருக்கு நேற்றைய தினம் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,90,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 40,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மேலும் 183 ​கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 107 ஆண்களும் 76 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 136 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 30 வயதிற்கும் குறைந்த 2 யுவதிகளும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது.