அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு வழங்க தீர்மானம்

by Staff Writer 23-08-2021 | 7:31 PM
Colombo (News 1st) அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று மாலை கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, இந்த மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை COVID நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். COVID சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.