மாபிம விடுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

மாபிம விடுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

by Staff Writer 22-08-2021 | 5:45 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த - மாபிம பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 03 சந்தேகநபர்களும் அடங்குகின்றனர். இவர்களில் 25 வயதான இரண்டு யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய சந்தேகநபர்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மாபிம பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றை சோதனைக்குட்படுத்திய போதே போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.