by Staff Writer 22-08-2021 | 1:27 PM
Colombo (News 1st) நாட்டில் டெல்டா பிறழ்வின் 04 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இன்று (22) காலை ஔிபரப்பப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளுக்கும் திறம்பட பதிலளிப்பதாகக் கூறினார்.
கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை தெரிவுசெய்யாமல் அருகிலுள்ள மத்திய நிலையங்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.