by Staff Writer 21-08-2021 | 2:09 PM
Colombo (News 1st) இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டோர், உடனடியாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு இராணுவத் தளபதி, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்ற தயாராகவிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.