பொத்துஹெரவில் ஆண் ஒருவர் கொலை 

பொத்துஹெரவில் ஆண் ஒருவர் கொலை 

by Staff Writer 21-08-2021 | 4:11 PM
Colombo (News 1st) பொத்துஹெர - கல்டொம்புவ பகுதியில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த 42 வயதான நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.