நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை 

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் 

by Staff Writer 21-08-2021 | 10:42 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (21) நாளையும் (22) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுமெனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.