காயங்குடாவில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கரடியனாறு - காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 21-08-2021 | 10:27 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கலடி - பதுளை பிரதான வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரை காட்டு யானை தாக்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.