மக்களை மீட்கும் போது உயிரிழப்புகள் ஏற்படலாம்

ஆப்கானிலிருந்து மக்களை மீட்கும் போது உயிரிழப்புகள் ஏற்படலாம் - அமெரிக்க ஜனாதிபதி

by Staff Writer 21-08-2021 | 3:35 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் போது, உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுவரை அமெரிக்கா 13,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டுள்ளதாகவும் இது வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிக சிரமமான மீட்புப்பணி எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு வர விரும்பும் அமெரிக்கர்களை அவர்களது வீட்டுக்கே அழைத்து வருவதாக பைடன் கூறியுள்ளார் இந்த மீட்புப்பணி மிகவும் ஆபத்தானது என்பதால், ஆயுதப் படையினருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் மீட்புப் பணிகள் மிகவும் நெருக்கடியான சூழலில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.