by Staff Writer 20-08-2021 | 10:33 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுக்கு போதுமான ஒக்சிஜன் நாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக தற்போது 300 தொன் ஒக்சிஜன் சுகாதார அமைச்சிடம் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.
இதனைத் தவிர, இந்தியாவிலிருந்து நாட்டிற்கு ஒக்சிஜனை கொண்டுவருவதற்காக 02 கப்பல்கள் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.