இன்று இரவிலிருந்து 30 ஆம் திகதி வரை நாடு முடக்கம்

இன்று (20) இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுகின்றது 

by Chandrasekaram Chandravadani 20-08-2021 | 2:34 PM
Colombo (News 1st) இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.