தனிமைப்படுத்தலை மீறிய மேலும் 284 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 284 பேர் கைது

by Staff Writer 18-08-2021 | 9:59 AM
Colombo (News 1st) இன்று (18) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் இதுவரை 55,173 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் 12 இடங்களில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த பகுதிகளில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது 199 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.