மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன

by Staff Writer 17-08-2021 | 3:31 PM
Colombo (News 1st) டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் மேலும் சில கொரோனா வைரஸ் பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார். SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய புதிய டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.