ஒருவருக்கு கொரோனா: நியூஸிலாந்து முடக்கப்பட்டது

நியூஸிலாந்தில் ஒருவருக்கு COVID தொற்று; தேசிய ரீதியிலான முடக்கம் அறிவிப்பு

by Bella Dalima 17-08-2021 | 3:02 PM
Colombo (News 1st) நியூஸிலாந்தில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு தேசிய ரீதியிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் 6 மாதங்களுக்கு பின்னர் ஒருவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதால், தேசிய ரீதியிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒருவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒக்லாண்ட் ஒரு வாரம் முடக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளும் மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. இது புதிய டெல்டா பிறழ்வாக இருக்கலாம் என்ற அனுமானத்தில் செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.