ஒக்சிஜன் கொண்டு வர இந்தியா சென்றது 'சக்தி' கப்பல்

by Staff Writer 16-08-2021 | 6:57 PM
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சக்தி' என்ற கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறினார். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளதால் அதனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்தது. இதற்கமைய, இந்தியா மற்றும் மலேசியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.