English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Aug, 2021 | 10:48 am
Colombo (News 1st) கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உயிரிழந்த அனைவரும் எவ்விதமான தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
இதனால், நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்துடாவ குறிப்பிட்டார்.
ஆகவே, அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான திகதியை அந்தந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகளூடாக அறிந்துகொள்ளுமாறும் ரஞ்சித் பட்டுவன்துடாவ மேலும் தெரிவித்தார்.
தற்போது பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வானது, மனித உடலில் விரைவாக உட்புகக்கூடியது எனவும்
டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றிய ஒருவரின் உடலில் மிக விரைவாக வைரஸ் அதிகளவில் உற்பதியாவதுடன், ஓரிரு நாட்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அணிந்திருக்கும் முகக்கவசத்தை கழற்றி வைக்கும் சில விநாடிகளில் கூட டெல்டா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் சமூக இடைவௌியை கடுமையாக பின்பற்றுமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
01 Jun, 2022 | 05:35 PM
19 Apr, 2022 | 11:11 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS