கொரோனா கட்டுப்பாட்டிற்கான சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் நாளை (17) விவாதம்

கொரோனா கட்டுப்பாட்டிற்கான சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் நாளை (17) விவாதம்

கொரோனா கட்டுப்பாட்டிற்கான சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் நாளை (17) விவாதம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2021 | 4:36 pm

Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வை நாளைய தினம் (17) மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை காலை 10 மணி தொடக்கம் மாலை 4.30 வரை சபை அமர்வு நடத்தப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாட்டிற்கான சட்டமூலம் நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற சபை அமர்வை நடத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

சபாநாயகரின் தலைமையில் இன்று முற்பகல் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்