மேலும் 156 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 156 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 13-08-2021 | 11:42 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 156 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (11) உறுதிப்படுத்தப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 87 ஆண்களும் 69 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 156 பேரில் 121 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். 30 வயது மற்றும் 59 வயதிற்கு இடைப்பட்ட 35 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,45,118 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 3,02,455 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.