கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் நீர்வெட்டு

by Staff Writer 13-08-2021 | 12:05 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு - 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.