by Staff Writer 13-08-2021 | 8:42 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை என கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர அனுப்பி வைத்துள்ள பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.