ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை 

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம் 

by Staff Writer 12-08-2021 | 10:04 PM
Colombo (News 1st) சுகாதார வசதிகளை வழங்குமாறு கோரி ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று (12) நள்ளிரவு 12 மணியில் இருந்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து தமது ஊழியர்களையும் பயணிகளையும் பாதுகாப்பதற்காக ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.