யாழ். கல்லுண்டாயில் பஸ் விபத்து: 20 பேர் காயம்

by Staff Writer 12-08-2021 | 10:57 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கல்லுண்டாயில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று இன்று (12) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பஸ் விபத்து குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்