Colombo (News 1st) அனைத்து வைத்தியசாலைகளையும் இணைக்கும் வகையில், கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளின் கொள்ளளவு மட்டம், அடைவு மட்டத்தை அடையாதிருப்பதற்கான தீர்வாக இது அமையும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டிய நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.