by Staff Writer 11-08-2021 | 12:12 PM
Colombo (News 1st) இன்று (11) அதிகாலை 15,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
துபாயிலிருந்து சரக்கு விமானத்தினூடாக இவை கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனிடையே, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பு நகரில் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கும் மேற்பட்டோருக்கு, சுகததாச விளையாட்டரங்கு வளாகத்தில் இன்றும் தடுப்பூசி செலுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு - விகாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலங்களும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
பத்தரமுல்லை - தியத்த உயனவிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்றும் (11) முன்னெடுக்கப்படுகின்றது.