தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்து 

by Staff Writer 11-08-2021 | 5:49 PM
Colombo (News 1st) தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறை தொடர்பாக இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.