by Staff Writer 10-08-2021 | 3:57 PM
Colombo (News 1st) மன்னார் - இலுப்பைக்கடவை பகுதியில் 39 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (10) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இருவரும் 131 கிலோ 725 கிராம் கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்களை கொண்டுசெல்வதற்காக பயன்படுத்தப்படும் குளிர்சாதனப்பெட்டி வசதி அடங்கிய லொறியொன்றை சோதனைக்குட்படுத்திய போது கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.