நேற்றைய தினத்தில் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

நேற்றைய தினத்தில் அதிகளவான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

by Staff Writer 10-08-2021 | 2:09 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், அதிகமான இரண்டாவது தடுப்பூசிகள் நேற்று (09) ஏற்றப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 311,102 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவற்றில் 307,267 பேருக்கு Sinopharm இரண்டாவது தடுப்பூசியும் 3,620 பேருக்கு AstraZeneca இரண்டாவது தடுப்பூசியும் 215 பேருக்கு Pfizer தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி அடங்கலாக நேற்றைய தினத்திற்குள் 490,805 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.