மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்

நாளையும் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்

by Staff Writer 10-08-2021 | 6:55 PM
Colombo (News 1st) நாட்டின் பல இடங்களில் நாளை (11) பலத்த மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை, காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.