by Staff Writer 10-08-2021 | 5:31 PM
Colombo (News 1st) இன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.